மனைவியின் இறப்பை கூட பொருட்படுத்தாமல் வாக்களிக்கும் ஜனநாயக கடமையை நிறைவேற்றிய முதியவருக்கு அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் நேரில் ஆறுதல்
மனைவியின் இறப்பை கூட பொருட்படுத்தாமல் வாக்களிக்கும் ஜனநாயக கடமையை நிறைவேற்றிய முதியவருக்கு அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் நேரில் ஆறுதல்
மதுரை மேலவாசல் பகுதியை சேர்ந்தவர் பழனிசாமி வயது 65 இவரது மனைவி காளியம்மாள் .கடந்த சட்டமன்ற பொதுத்தேர்தல் வாக்குபதிவு நாளன்று காளியம்மாள் எதிர்பாராதவிதமாக மறைந்து விட்டார் .மனைவிக்கு இறுதிச்சடங்கு செய்யும் கடமையை காலம் தாழ்த்தி விட்டு முதலில் சென்று தமது வாக்களிக்கும் ஜனநாயக கடமையை நிறைவேற்றிய பழனிசாமி குறித்து நாளிதழ்களில் செய்தி வெளியாகி இருந்தது .இது பற்றி சமூக வலைதளம் மூலம் தனது பாராட்டை நிதி மற்றும் மனித வள மேலாண்மை துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்து இருந்தார்.இந்த நிலையில் இன்று தனது குடும்பத்தினருடன் நேரில் சென்று மேல வாசல் பகுதியில் வைக்கப்பட்டு இருந்த காளியம்மாள் திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.தொடர்ந்து அவரது கணவர் பழனிசாமிக்கு ஆறுதல் கூறிய அவர் தமது நன்றியையும் தெரிவித்தார்.இந்த சம்பவம் அப்பகுதியில் உள்ளவர்களை நெகிழ வைத்தது