அனைத்து துறைகளிலும் பெண்களுக்கான சம வாய்ப்பை ஏற்படுத்தி கொடுத்தவை திராவிட இயக்கங்கள்: நிதியமைச்சர் பி டி ஆர் பழனிவேல் தியாகராஜன் பேச்சு



 அனைத்து துறைகளிலும் பெண்களுக்கான சம வாய்ப்பை ஏற்படுத்தி கொடுத்தவை திராவிட இயக்கங்கள்: நிதியமைச்சர் பி டி ஆர் பழனிவேல் தியாகராஜன் பேச்சு


  மதுரை மாவட்டத்தில் சமூக நலத்துறையின் கீழ் ஏழை பெண்களுக்கு திருமண நிதி உதவியுடன் தாலிக்கு 8 கிராம் தங்கத்தை மதுரை கிழக்கு மேற்கு செல்லம்பட்டி உசிலம்பட்டி சேடபட்டி மேலூர் கொட்டாம்பட்டி அலங்காநல்லூர் திருப்பரங்குன்றம் வாடிப்பட்டி மற்றும்  நகர்ப்புறத் தை சேர்ந்த 548 பயனாளிகளுக்கு தலா 8 கிராம் தங்க நாணயம் ஆக மொத்தம் 1,99,77,888  மதிப்புள்ள 4 கிலோ மற்றும் 384 கிராம் தங்கத்தை பயனாளிகளுக்கு வழங்கிடும் நிகழ்ச்சியில் உரையாற்றிய  நிதி மற்றும் மனிதவள மேலாண்மை துறை அமைச்சர்  பிடி ஆர் பழனிவேல் தியாகராஜன், திராவிட இயக்கத்தின் அடிப்படைக் கொள்கையே கல்வி சொத்து வேலைவாய்ப்பு அனைத்திலும் பெண்களுக்கு சம உரிமை மற்றும் வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுப்பது தான்  . உலகில் எங்கெல்லாம் அத்தகைய உரிமைகள் பெண்களுக்கு வழங்கப்பட்டு  இருக்கிறதோ அங்கு சமுதாயம் சிறப்பான நிலையில் முன்னேறி இருக்கிறது என்பது நிரூபணமான ஒன்று.


 நூறு ஆண்டுகளுக்கு முன்பே பெண்களுக்கு வாக்குரிமை கட்டாய ஆரம்பக் கல்வி ஆகியவற்றை அளித்து பெருமை சேர்த்த இயக்கம் திராவிட இயக்கத்தின் தூணாக திகழ்கின்ற நீதிக்கட்சி ஆகும். இது நிகழ்ந்தது 1920 ஆம் ஆண்டு.


 தொடர்ந்து எப்பொழுதெல்லாம் திராவிட கட்சிகள் ஆட்சிக்கு வருகிறதோ அந்த கொள்கையை அடுத்த இடத்திற்கு கொண்டு சென்று சேர்ந்திருக்கிறது. இட ஒதுக்கீட்டை தேர்தல் வேலைவாய்ப்பு   உள்ளிட்ட பல்வேறு துறைகளில் ஏற்படுத்தியிருக்கிறது.தமிழ்நாட்டில் 18 வயதுக்கு கீழ் உள்ள பெண்கள் யாரும்  கல்வியறிவு பெறாதவர்கள் என்ற நிலை இல்லை ஆனால் வட மாநிலங்களில் 30 சதவீதம் பெண்கள் தான் 18 சதவீதத்திற்கு கீழ் கல்வியறிவு பெற்றுள்ளனர். இதனால் இங்கு தனிநபர் வருமானம் இரண்டு லட்சத்து 50 ஆயிரம் என்றால் உத்திரப்பிரதேசம் பீகார் போன்ற மாநிலங்களில் 75 ஆயிரத்தைத் தாண்டவில்லை. ஆகையால் தான் இதுபோன்ற   திட்டங்களை அதிகரித்து வருகிறோம். பல காரணங்களால் தங்கம்   வாங்கி டாமல் இடையில் சில காலம் தடைபட்டு இருந்த இந்தத் திட்டத்தை தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அவர்கள் முயற்சி எடுத்து உடனடியாக நிறைவேற்ற எங்களுக்கு உத்தரவிட்டதன் பேரில் இது போன்ற நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது. பொதுவாக தமிழக அரசியல் இலவசத் திட்டங்களால்  பின் தங்கி விட்டதாக பொய்யான தகவலை மீண்டும் மீண்டும் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். இதுபோன்ற திட்டங்களில் வெறும் இலவசத் திட்டங்கள் மட்டுமல்ல சமூக நீதிக்கான திட்டங்கள் பொருளாதார வளர்ச்சிக்கான திட்டங்கள். சமூக நீதியையும் பொருளாதார வளர்ச்சியையும் மனதில் கொண்டு மனிதநேயத்துடன் நிறைவேற்றப்படும் இந்தத் திட்டங்கள் சமுதாய முன்னேற்றத்திற்கு வழி வகுக்கும் அதனால்தான் வட மாநிலங்களை காட்டிலும் தமிழ்நாடு சமூக நிதி திட்டங்களில் முதன்மையாக விளங்குகிறது இதனை இன்னும் சிறப்பாக செய்வதற்கு நாங்கள் தொடர்ந்து முயற்சி செய்வோம். நீதிக்கட்சி ஆட்சி காலத்தில் இருந்து பல தலைமுறைகளாக சமூக நிதி திட்டங்களை நிறைவேற்றி வரும் குடும்பத்தின் உறுப்பினர் என்ற முறையிலும் மதுரையில் பல்வேறு திட்டங்களை நிறைவேற்றி தந்த தலைமுறை என்ற முறையிலும் இந்த நிகழ்வில் பங்கேற்று நலத்திட்ட உதவிகள் வழங்குவதில் மகிழ்ச்சி அடைகிறேன் என்றார்

Popular posts from this blog

மீனாட்சி மிஷன் நடத்திய பயிலரங்கில்: இதயவியலின் இடையீட்டு சிகிச்சையில் நிபுணத்துவ உத்திகளின் நேரடி செயல்முறை விளக்கம்

வெஸ்டர்ன் டிஜிட்டல் டபிள்யுடி எலிமெண்ட்ஸ் எஸ்இ எக்ஸ்டர்னல் எஸ்எஸ்டி அறிமுகம்

மதுரையில் ராயல்ஓக் ஃபர்னிச்சரின் புதிய ரீடைல் ஸ்டோர் திறப்பு :