மதுரை மாவட்டத்தில் கிரானைட் தொழிலுக்கு அனுமதி வேண்டி உரிமையாளர்கள் சங்கம் சார்பில் கோரிக்கை : தலைவர் பி.ராஜசேகரன் பேட்டி


 


மதுரை மாவட்டத்தில் உள்ள அனைத்து கிரானைட் நிறுவனங்கள் தொழில் நடத்த தமிழக அரசும் மாவட்ட நிர்வாகமும் அனுமதி வழங்க வேண்டும் என்று மதுரை மாவட்ட கிரானைட் உரிமையாளர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.



மதுரை செய்தியாளர் அரங்கத்தில் பத்திரிகையாளர்களை சந்தித்த கிரானைட் உரிமையாளர் சங்கத்தின் தலைவர் பி.ராஜசேகரன் கூறியதாவது:-



கடந்த 2012ம் ஆண்டு ஆகஸ்ட் ஒன்றாம் தேதி கிரானைட் நிறுவனங்களின் விதிமீறல் என மதுரை மாவட்ட ஆட்சியரால் நோட்டீஸ் வழங்கப்பட்டது. அதன்பேரில் குற்ற வழக்குகளும் பதிவு செய்யப்பட்டன. 



மதுரை மாவட்டத்தில் அப்போது செயல்பட்டு வந்த 175 கிரானைட் குவாரிகளில் 84 குவாரிகள் மீது வழக்கு தொடுக்கப்பட்டன. இதன் மீதான வழக்கு விசாரணை முடியும் வரை மீதமுள்ள 91 குவாரிகள் இயங்க தடை விதிக்கப்பட்டது. தமிழக அரசின் உத்தரவு காரணமாக இயங்காத 91 குவாரிகளுக்கும்  தொடர்ந்து இரண்டு ஆண்டுகள் ஏன் தொழில் நடைபெறவில்லை என்று விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. அதற்குரிய விளக்கத்தை நாங்கள் அளித்துள்ளோம். கடந்த 8 ஆண்டுகளாக  வழக்குகள் நடைபெற்று வரும் நிலையில் சில வழக்குகளில் இன்னும் குற்றப்பத்திரிக்கையை தாக்கல் செய்யப்படவில்லை இதன் காரணமாக எங்களது தொழில் மிகவும் நலிவடைந்து உள்ளது. இதனை சார்ந்து வாழும் பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப் பட்டுள்ளது.



பிற மாவட்டங்களில் தங்குதடையின்றி கிரானைட் குவாரிகள் நடைபெற்று வரும் நிலையில் மதுரை மாவட்டத்தில் மட்டும் இந்த தடை நீடிப்பது மனவேதனையை ஏற்படுத்தியுள்ளது.



கிரானைட் முறைகேடுகள் தொடர்பாக தமிழக அரசு மறு விசாரணை மேற்கொள்ள வேண்டும் எனவும்   எங்களது தொழில் தடையின்றி நடைபெறுவதற்கு தமிழக அரசும் மாவட்ட நிர்வாகமும் உத்தரவிட வேண்டுகிறோம், எனக்கூறினார்.


Popular posts from this blog

மீனாட்சி மிஷன் நடத்திய பயிலரங்கில்: இதயவியலின் இடையீட்டு சிகிச்சையில் நிபுணத்துவ உத்திகளின் நேரடி செயல்முறை விளக்கம்

வெஸ்டர்ன் டிஜிட்டல் டபிள்யுடி எலிமெண்ட்ஸ் எஸ்இ எக்ஸ்டர்னல் எஸ்எஸ்டி அறிமுகம்

மதுரையில் ராயல்ஓக் ஃபர்னிச்சரின் புதிய ரீடைல் ஸ்டோர் திறப்பு :