பாரதிய ஜனதா கட்சியின் மாவட்ட செயற்குழு மற்றும் சக்தி கேந்திர பொறுப்பாளர்கள் கூட்டம்
ஈரோடு, பாரதிய ஜனதா கட்சியின் மாவட்ட செயற்குழு மற்றும் சக்தி கேந்திர பொறுப்பாளர்கள் கூட்டம் சம்பத் நகரிலுள்ள அமுத பவனில் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு மாவட்டத் தலைவர் சிவசுப்பிரமணியம் தலைமை தாங்கினார்.
கோட்ட பொறுப்பாளர் பாலகுமார் முன்னிலை வகித்தார். இக்கூட்டத்தில் கட்சியின் செயல்பாடுகள் மக்களுக்கு சென்றடைவது குறித்து விவாதிக்கப்பட்டது. சக்தி கேந்திர பொறுப்பாளர்கள் வேலை பணியை குறித்தும் ஆலோசனை வழங்கப்பட்டது.
நிகழ்வில் மாநில பிரச்சார பொறுப்பாளர் சரவணன், மாவட்ட பொதுச்செயலாளர் குணசேகர், விவேகானந்தன், மாநில வக்கீல் பிரிவு பொறுப்பாளர் பழனிச்சாமி, வக்கீல் ராஜேஷ்குமார், பாஜக நிர்வாகிகள் பலர் கூட்டத்தில் கலந்துகொண்டனர்.