காய்ச்சல் மற்றும் ஆக்சிஜன் அளவை கண்டறிய காவல் ஆணையர் உத்தரவு
மதுரை மாநகர காவல் ஆணையர் பிரேம்ஆனந்த் சின்ஹா மதுரை மாநகரில் பாதுகாப்பு பணியில் உள்ள அனைத்து காவலர்களுக்கும் உடனடியாக THERMAL SCANNER மற்றும் PULSE OXIMETER மூலமாக காய்ச்சல் மற்றும் ஆக்சிஜன் அளவை கண்டறியும்படி அனைத்து காவல் உயர் அதிகாரிகளுக்கும் உத்தரவிட்டுள்ளார். இதன்படி பெரியார் பேருந்து நிலையம் அருகே திடீர் நகர் காவல் ஆய்வாளர் கீதா லெட்சுமி ,சுப்பிரமணியபுரம் காவல் ஆய்வாளர் கலைவாணி ஆகியோர் பரிசோதனை மேற்கொண்டனர்.